கஜா புயல்
-கவிஞர் செல்வராஜா
(9486106284)
எங்களுக்கெல்லாம்
சோறு போட்டு
வாழ வைத்த
சோழ நாட்டை
கூறு போட்டு
தாழவைக்க வந்த
கஜா புயலே
உனக்கு
அப்படி என்ன ஒரு ஆணவம்?
இப்படி ஆடி விட்டாயே
கோர தாண்டவம்.
இது என்ன கொடுமை?
ஏற்கனவே
மீத்தேன் பிரச்சனையால்
எரியும் எங்கள் வயிற்றில்
நீ பீய்ச்சி அடித்த
தண்ணீர் கூட
எண்ணெய்யாக ஆகிவிட்டதே…
அன்னை வேளாங்கண்ணி
நாகூர் தர்க்கா
தஞ்சை பிரகதீஸ்வரர்
இப்படி…
மும்மதமும் சம்பவிக்கும்
புண்ணிய பூமியை
ஏய் கஜா புயலே
சின்ன பயலே
எப்படி துணிந்தாய்
அதை அழிக்க…
நாங்கள் என்ன
ஏமாளிகளா
எங்ளை சோமாலியர்களாய்
ஆக்கத் துணிந்தாய்…
நாங்கள் ப்பீனிக்ஸ் பறவைகள்
எரித்தாலும் உயிர்த்தெழுவோம்
வீழ்ந்தாலும் இன்னும்
வீரியமாக வாழ்வோம்
ஏனெனில்…
நாங்கள் தமிழர்கள்.