கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப்
பாடல்கள்-8
பாடல்-8 இனிய உளவாக
(2015)
இயக்கம் :பால சீனிவாசன்சீனிவாசன்
: இசை : ஜீவன் மயில்
பாடல் :கவிஞர் செல்வராஜா
பல்லவி:
ஏய்…ரவுண்டு ரவுண்டு
ரவுண்டு
ரவுண்டு கட்டி அடிப்பேன்
நான் ரவுசு ரவுசு ரவுசு
ரவுசு கட்டி குடிப்பேன்
நான் காசு காசு காசு
காச அள்ளி இறைப்பேன்
சூர காத்து காத்து
காத்து
காத்த போல பறப்பேன்
வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
(ரவுண்டு….
சரணம்/1
நான் சொடக்கடிச்சா
போதும்
அந்த சொப்பன சுந்தரி
நிப்பா
நான் கண்ணடிச்சா போதும்
அவ சரக்க ஊத்தி வப்பா
வாலிபத்தின் முறுக்கு-அது
வரம்பில்லாம இருக்கு
கிட்ட வாடி சிலுக்கு-அடி
என்ன போட்டு உலுக்கு
ராத்திரி பகலும் தெரியவில்ல
ரைட்டும் தப்பும் எனக்கு
இல்ல
வாலிப வயசுக்கு தடையேது
வாழத்தான் வாழ்க்கை
விளையாடு
ஏய் வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
(ஏய்…வாடி..
சரணம்/2
நான் சாமியாட போறேன்
தீர்த்தம் கொஞ்சம்
தெளிடி
நான் பூஜை செய்யப்
போறேன்
சை டிஷ்ஸை வையடி
வரவு செலவு கணக்கு
அடி கவலை இல்ல எனக்கு
அள்ளி அள்ளி கொடுப்பேன்
நான் கில்லி போல அடிப்பேன்
இன்பங்கள் எனக்கு பொதுவுடமை
இளமைதான் எனக்கு தனியுடமை
அனுபவிக்கும் வயசுல
அனுபவிப்பேன்
அட அனுதினம் வாழ்வ
நான் ரசிப்பேன்
வாடி வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
(ரவுண்டு…