Saturday 27 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-8         
                         
பாடல்-8       இனிய உளவாக (2015)
              இயக்கம் :பால சீனிவாசன்சீனிவாசன்          :                             இசை  : ஜீவன் மயில்

                 பாடல் :கவிஞர் செல்வராஜா                      
                                    

பல்லவி:
ஏய்…ரவுண்டு   ரவுண்டு   ரவுண்டு
ரவுண்டு  கட்டி  அடிப்பேன்
நான்  ரவுசு  ரவுசு  ரவுசு
ரவுசு  கட்டி குடிப்பேன்
நான்  காசு  காசு  காசு
காச அள்ளி இறைப்பேன்
சூர காத்து  காத்து  காத்து
காத்த போல பறப்பேன்
வாடி  வாடி  வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
                          (ரவுண்டு….

சரணம்/1
நான் சொடக்கடிச்சா போதும்
அந்த சொப்பன சுந்தரி நிப்பா
நான் கண்ணடிச்சா போதும்
அவ  சரக்க ஊத்தி வப்பா
வாலிபத்தின் முறுக்கு-அது
வரம்பில்லாம இருக்கு
கிட்ட வாடி சிலுக்கு-அடி
என்ன போட்டு உலுக்கு
ராத்திரி பகலும் தெரியவில்ல
ரைட்டும் தப்பும் எனக்கு இல்ல
வாலிப வயசுக்கு தடையேது
வாழத்தான் வாழ்க்கை விளையாடு
ஏய்  வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா (ஏய்…வாடி..

சரணம்/2
நான் சாமியாட போறேன்
தீர்த்தம் கொஞ்சம் தெளிடி
நான் பூஜை செய்யப் போறேன்
சை டிஷ்ஸை வையடி
வரவு செலவு கணக்கு
அடி கவலை இல்ல எனக்கு
அள்ளி அள்ளி கொடுப்பேன்
நான் கில்லி போல அடிப்பேன்
இன்பங்கள் எனக்கு பொதுவுடமை
இளமைதான் எனக்கு தனியுடமை
அனுபவிக்கும் வயசுல அனுபவிப்பேன்
அட அனுதினம் வாழ்வ நான் ரசிப்பேன்
வாடி  வாடி வாடி வனஜா
ஒன் வயசு ரொம்ப இளசா
                         (ரவுண்டு…
      





Tuesday 23 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-7         
                        
பாடல்-7              இனிய உளவாக (2015)
                       இயக்கம்   :பால சீனிவாசன்                                                     
                                     இசை  : ஜீவன் மயில்
                                     பாடல் :கவிஞர்

செல்வராஜா

பல்லவி:
சகியே என் சகியே
சரிகம பத இசையே
உன்னாலே ரெட்டை இதயம்
என்னுள் இயங்குதடி
சுகியே என் சுகியே
சுகமான சகியே
மெளனத்தின் மொழியால் வந்து
காதல் சொல்லுறியே
விரல் பிடித்து செல்பவளே
வெறுக் கழுத்தை கொண்டவளே
உனக்காக தங்கத் தகடு
செய்ய சொல்லி வந்தேண்டி
                          (சகியே…
சரணம்/1
பேஸ் புக்கில் உன் பெயரை
பாஸ்வேர்டா வைப்பேனே
டுவிட்டிரிலே உன் முகத்தை
லைக் என்று கொடுப்பேனே
உன்னைக் காணா ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும் சரிகின்றேன்
உன்னைக் கண்ட ஒவ்வொரு நாளும்
புதிதாய் புதிதாய் பிறக்கின்றேன்
சுட்டி சுட்டி பேச்சால்
எனை சுண்டி சுண்டி ஈர்த்தாய்
சூது வாது இன்றி
காதல் சுமைதனை வார்த்தாய்
                            (சகியே…
சரணம்/2
போதி மரம் தேவையில்லை
உன் காலடியே போதுமென்பேன்
பூ முகங்கள் தேவையில்லை
உன் சிறு நகையே போதுமென்பேன்
சுடிதார் போட்ட சுந்தரியே
ஐஸ் கட்டி மழையை ஏன் பெய்தாய்
சும்மா கிடந்த என் மனசை
சுறுக்கென்று தானே ஏன் கொய்தாய்
நைல் நதி போல
என் நெஞ்சுக்குள்ள ஓட
கோடை வெய்யில் போல
நான் உன்னை எண்ணி வாட
நான் உன்னை எண்ணி வாட
                           (சகியே…      



Tuesday 16 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-6         
                        
பாடல்-6      இனிய உளவாக (2015)
                               இயக்கம்:பாலனிவாசன்                                                          

இசை  : ஜீவன் மயில்  
பாடல் :கவிஞர் செல்வராஜா


                                    
                                     

பல்லவி:
ஆ/ மானா மதுரயில
    என்ன மடக்கி புடிச்சவளே
    என்ன மடக்கி புடிச்சவளே
    என் மனச கெடுத்தவளே
          அந்தியூரு ஈரோட்டுல
    என்ன முந்தியில முடிஞ்சவளே
          என்ன முந்தியில முடிஞ்சவளே
          அள்ளி முத்தங்கள பதிஞ்சவளே
                       ஓன் அழகான தோற்றம் கண்டு
          அழுங்காம மயங்கிப் போனேன்....
          ஓஹோ...ப்ளீஸ் லவ்...மீ
           ஓஹோ...ப்ளீஸ்  லவ் ..மீ
சரணம்:1
      பெ/ செல்போனா நானிருக்கேன்
           கிட்ட வாயேண்டா
           சிம்கார்டை போட்டு நீயும்
           பேசி போயேண்டா
                  ஆ/ டீ...நகர் ஏரியாவா
            நானிருக்கேண்டி
            வேணுங்கிற பொருள யெல்லாம்
            வாங்கிப் போயேண்டி

         பெ/ பம்பரம் தொப்புளில் வேண்டாம்
             ஆம்லட்டும் தொப்புளில் வேண்டாம்
             கண்ணால காதல் பார்வை
             போதும் போதும் வாடா
                ஓ...கே...ஐ...லவ்...யூ
                                 ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                  ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                                                                 (மானா….

      சரணம்/2

      பெ/ தினத்தந்தி பேப்பர் போல
           நானிருக்கேண்டா
           தினம் ஒரு செய்தியைத்தான்
           படிச்சி பாரேண்டா
                   ஆ/பேஸ் புக்கா நானிருக்கேன்
            பக்கம் வாயேண்டி
            உன் பேஸைத்தான் காட்டி நீயும்
            மெம்பர் ஆயேண்டி       
         பெ/ கண்னால கலக்குற பையா
              காதல சொல்லுற மெய்யா
              மெட்ராஸை வாங்கித்தாடா
              கூட நானும் வாறேன்
          ஆ/ ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                 ஓ...கே... ஐ.. லவ்..யூ
                                                                                     (மானா....











Saturday 13 October 2018

எனது பார்வையில் கவிப்பேரரசு வைரமுத்து
                                                             -கவிஞர் செல்வராஜா





Wednesday 10 October 2018


கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-5         
                        
பாடல்-5             இனிய உளவாக (2015)
                            இயக்கம்   :பால சீனிவாசன்                                                     
                                     இசை  : ஜீவன் மயில்
                                     பாடல் :கவிஞர் செல்வராஜா


பல்லவி/
இன்பங்கள் இங்கே கொட்டிக் கிடக்குது
வெட்ட  வெளியிலே –அதை
கண்டு என் மனம்தான் துள்ளிக் குதிக்குது
கட்டுக்கடங்கலையே
அழகான மல்லிகை அழைக்குது
தலை சூட நெஞ்சம்தான் துடிக்குது
ஆனந்தம் எங்கும் ஆனந்தமே-அந்த
அகாயம் பூமியும் என் வசமே (இன்பங்கள்….

சரணம்/1
சின்ன சின்ன ஆசையில்தான் இன்பம் இருக்கு
அந்த சிட்டுக்குருவி செய்வதென்ன செல்ல கிறுக்கு
கொக்கரக்கோ என்று கோழி வாழ்த்து சொல்லுதே-அட
கொஞ்சும் கிளி என்னைப் பார்த்து லவ் யூ சொல்லுதே
உழவரெல்லாம் வெளுத்துப் போட்ட பச்சை சேலையோ
வரப்பு எல்லாம் அத்ற்குப்  போட்ட அழகு வேலியோ
இளநீரை குடிக்கும் போது
கொக்கோ கோலா தோற்கும்
பதநீரைப் பருகும் போது
பரவசமாய் இருக்கும்
என் வண்ணம் தொட்டு வானவில்லும் வரைந்தேன்
கண்ணுக்குள் வழியும் கனவினில் கரைந்தேன்
அட்டா இயற்கை அழகு
அதுபோல் இளமை பழகு

சரணம்/2
என்னை பார்த்து வண்னப் பூக்கள்
பூத்துக் குழுங்கும்
என் கண்னம் ரெண்டில் காத்து வந்து முத்தம் கொடுக்கும்
கொக்கும் எனது அழகைப் பார்த்து
சொக்கிப் போகுமே-அட
குயிலும் எனது குரலைக் கேட்டு
பாட்டாய் பாடுமே
வானம் இங்கே என்னை காக்கும் அன்பு வேலியோ
நட்சத்திர கூட்டமெல்லாம் காவலாளியோ
சோளக்காட்டு பொம்மை தனியாத்தானே நிற்கும்
ஜோடித்தேடி அது என்னைத்தானே நினைக்கும்
பூமியை உருட்டி பூப்பந்து செய்தேன்
நிலவெனும் கூந்தலில் நான் அதை வைத்தேன்
அட்டா இனிமை  இனிமை
அடடா இயற்கை இனிமை (இன்பங்கள்…
  



Saturday 6 October 2018

கவிஞர் செல்வராஜா வின்
திரையிசைப் பாடல்கள்-4

பாடல்-4        படம்-முயல்
                           இயக்கம்:s.p.s குகன்
                           இசை   :சரவண கனேஷ்
                           பாடல்  :கவிஞர் செல்வராஜா


பல்லவி:
அச்சம் தவிர்
நெஞ்சம் நிமிர்
சோகம் விடு
வேகம்  எடு

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையுமே
ஒவ்வொரு விதத்தில் போர்க்களமே
வாழ்க்கை என்பது ஒருமுறை தானே
வாழ்ந்து காட்டு உன் தலைமுறைதான்
                             (அச்சம் தவிர்…

சரணம்-1
கோழை வாழ்வில் தினம் சாவு
வீரன் வாழ்வில் ஒரு சாவு
முடியும் என்று போராடு
முடித்தால் நீ தான் வரலாறு 
      
முடியும் என்று போராடு
முடித்தால் நீ தான் வரலாறு       
                          (அச்சம் தவிர்…
வெள்ளைக் காரனை வீழ்த்திடவே
நம்மில் பலரிங்கு உயிர் துறந்தார்
கொள்ளைக் காரனை இங்கொழிக்க
கொள்கை வீரனாய் மாறி விடு

கொள்ளைக் காரனை இங்கொழிக்க
கொள்கை வீரனாய் மாறி விடு

எல்லைக் காக்கும் வீரனுக்கு
கண்ணில் துளியும் உறக்கம் இல்லை
நம்மை காக்க வந்தவர்கள்
தன்னை மறந்தே உறங்குகிறார்

முடியாது என்ற வார்த்தையினை
மனதில் இருந்து எடுத்து விடு
இரக்கமற்ற மனிதனை அழித்து
ஈகை மலர செய்து விடு
                       (அச்சம் தவிர்…
சரணம்-2
உனக்கென வாழ்வதும் நியாமடா
பிறர்க்கென வாழவும் வேண்டுமடா
உனக்குள்ள  வாழ்க்கையை பிறர்க்கென வாழ்ந்தால்
உண்மையில் நீதான் தலைவனடா

புறப்படு  புறப்படு
இதுதான் நேரம்
இதுவரை பொறுமையாய் இருந்தது போதும்
இனி வருவது இளைஞர்கள் காலம்
இனி எங்கும் இல்லை
கொடுமையின் கோலம்
                       (அச்சம் தவிர்…