குழந்தைப் பாடல்
-கவிஞர் செல்வராஜா
இன்று
அதிகாலையில்
குழந்தைப் பாடலாக்கம் செய்யும்
தீராத தாகத்தோடு
பேனாவை
கையில் எடுத்தேன்.
எவ்வளவு முயற்சித்தும்
எனக்கான கவிதை
வந்தபாடில்லை.
யோசிக்கும் போது
நேற்றிரவு
சாப்பாட்டுத் தட்டில்
தண்ணீரை ஊற்றிய
எனது குழந்தையை
அடித்தது
கையை உறுத்தியது.
மன்னிப்பு கோறும்
பார்வையில்
எட்டிப் பார்த்தேன்.
கவிதையை
கையில் பிடித்தபடி
உறங்கிக் கொண்டிருந்தாள்
என் மகள்.