கவிஞர் செல்வராஜாவின்
திரையிசைப் பாடல்கள்-3
பாடல்-3
கிடாவிருந்து
இயக்கம்:A.தமிழ் செல்வன்
இசை
: நல்லதம்பி
பாடல் :கவிஞர் செல்வராஜா
தொகையறா/
அய்யனாரு துணையிருக்க
அம்பிகையும் வழிநடத்த
ஆண்டிப்பட்டியார் கெடா தோத்ததடா….
நம்ம….
அரசம்பட்டியார் கெடா ஜெயிச்சதடா
“ டேய்….கொஞ்சம்….பொத்து…
ஏய்…அங்க என்னடி பண்றீங்க …நல்லா
குலவையை கொழைச்சி
அடிங்கடி…
குலவை: …….. …………
…………….
பல்லவி/
வீச்சருவாள் மீசக்காரன்
வீரமுள்ள ரோசக்காரன்
வாழையடி வாழையா
மானங்காக்கும் வீரன்தான்
வாழையடி வாழையா
மானங்காக்கும் வீரன்தான்
அய்யனாரு துணையிருக்க…துணையிருக்க
அம்பிகையும் வழிநடத்த…. வழிநடத்த
அய்யனாரு துணையிருக்க…துணையிருக்க
அம்பிகையும் வழிநடத்த…. வழிநடத்த
உருமி மேளம் கல கலக்க
கரக ஆட்டம் தள தளக்க
கெடா விருந்து மண மணக்க
ஊரு ஜனம் கிறு கிறுக்க
தோத்து போன ஆடு இங்கே
ஜெயிக்குதடி குழம்புக்குள்ளே
(வீச்சருவாள்…
சரணம்/1
பொட்டு வைச்சு பூவும் வைச்சு
கன்னிப் பொன்னு காத்திருக்கு
கன்னிப் பொன்ன பார்த்திடத்தான்
காளை எல்லாம் காத்திருக்கு
பொட்டு வைச்சு பூவும் வைச்சு
கன்னிப் பொன்னு காத்திருக்கு
கன்னிப் பொன்ன பார்த்திடத்தான்
காளை எல்லாம் காத்திருக்கு
வண்டி வேடிக்கை இங்கு
வர்ண ஜாலம் காட்டுதே
ரங்க ராட்டிணம் எல்லாம்
சந்தோ சத்தைக் கூட்டுதே
கலைக் கட்டுதே எங்க ஊருடா
ஆண்டிப்பட்டியே வந்து பாருடா
உருமி மேளம் கல கலக்க
கரக ஆட்டம் தள தளக்க
தோத்து போன ஆடு இங்கே
ஜெயிக்குதடி குழம்புக்குள்ளே
சரணம்/2
நாட்டுக் கோழி வாசனைத் தான்
சுண்டித் தானே இழுக்குதே
சுதியைத் தான் ஏத்திக் கிட்டேன்
ரெண்டு ரெண்டா தெரியுது
நாட்டுக் கோழி வாசனைத் தான்
சுண்டித் தானே இழுக்குதே
சுதியைத் தான் ஏத்திக் கிட்டேன்
ரெண்டு ரெண்டா தெரியுது
நல்லி எழும்ப கொஞ்சம்
உறிஞ்சி பாரு சூப்பரு
எல்லோ ருக்குமே இந்த
விருந்து தானே ஆப்பரு
கலக்கட்டுதே எங்க ஊருடா
ஆண்டிப்பட்டியே வந்து பாருடா